கனடா, அவுஸ்திரேலியா, ஜேர்மனி, இத்தாலி, டுபாய் ஆகிய நாடுகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ஏமாற்றிய 2 பெண்கள் உட்பட மூவரை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் நேற்று (31) கைது செய்துள்ளனர்.
வேலைவாய்ப்புப் பணியகத்தின் முறையான அனுமதிப்பத்திரம் இன்றி கனடா, அவுஸ்திரேலியா, இத்தாலி ஆகிய நாடுகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி சுமார் 24 மில்லியன் ரூபாவை மோசடி செய்த பெண் ஒருவர் கந்தானை பிரதேசத்தில் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண் கந்தானை பிரதேசத்தில் அனுமதிப்பத்திரம் பெற்று வேலை வாய்ப்பு நிலையம் ஒன்றை நடத்தினாலும், மேற்படி நாடுகளில் தொழில் வழங்குவதற்கான முறையான அனுமதிப்பத்திரம் அந்த நிறுவனம் பெற்றுக்கொள்ளவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பெண்ணுக்கு எதிராக பணியகத்திற்கு 19 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதுடன், கைது செய்யப்பட்ட பெண்ணை இன்று (01) வெலிசர நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த திட்டமிடப்பட்டிருந்தது.
அத்துடன் சீதுவ, லியனகேமுல்ல பிரதேச பணியகத்தில் முறையான அனுமதிப்பத்திரம் இன்றி சட்டவிரோத வேலைவாய்ப்பு நிறுவனம் ஒன்று நடத்தப்படுவதாக கிடைத்த தகவலுக்கு அமைய, புலனாய்வு அதிகாரிகள் நேற்று (31) அந்த இடத்தை சுற்றிவளைத்துள்ளனர்.
அங்கு, ஜெர்மனி, டுபாய் மற்றும் கனடாவில் வேலை வழங்குவதற்காக பெறப்பட்ட 13 கடவுச்சீட்டுகள் மற்றும் 11 பயோடேட்டாக்களும் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டன.
மேற்படி இடத்தின் உரிமையாளரான அமண்தொலுவ என்பவர் விசாரணை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சந்தேக நபர் இன்று (01) நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
கனடாவில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் வேலை தருவதாகவும் கூறி 1,452,000 பணத்தை மோசடி செய்த திஹாரிய பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் நேற்று (31) விசாரணை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பான முறைப்பாடு தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக பணியகத்திற்கு அழைக்கப்பட்ட போது, வாக்குமூலத்தையும் சந்தேக நபரையும் பதிவு செய்த பின்னர் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று (31) தலங்கம பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அவர், இன்று (01) அத்தனகல்ல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவிருக்கிறார்.