வத்தளையில் பாரிய தீ

Byadmin

Jul 30, 2024

வத்தளை பகுதியிலுள்ள இரண்டு மாடி வீடொன்றில் பரவிய தீ விபத்தில் 90 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து, பிரதேசவாசிகளின் உதவியுடன் தீ கடைடுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

குறித்த வீட்டின் அறை ஒன்றிற்குள் தீ காயங்களுடன் உயிரிழந்த நிலையில் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த நபரின் மனைவி சில தினங்களுக்கு முன்னர் இரத்தினபுரியிலுள்ள அவரது மகள் வீட்டிற்கு சென்றுள்ளதாக தெரிய வருகின்றது.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வத்தளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *