குளவி கொட்டுக்கு இலக்கான 42 பாடசாலை மாணவர்கள்!

Byadmin

Jul 30, 2024

கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிண்ணியா அல் அக்ஷா ஆண்கள் பாடசாலையில் கட்டிடத்தின் கூரையிலிருந்த குளவி கூட்டின் ஒரு பகுதி இன்று (30) காலை உடைந்து விழுந்ததில் மாணவர்கள் குழுவொன்று குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

10 முதல் 15 வயதுக்குட்பட்ட சுமார் 42 மாணவர்கள் இதன்போது காயமடைந்துள்ளனர்.

காயமடைந்த சிறுவர்கள் கிண்ணியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *