நாளை முதல் முச்சக்கரவண்டிக் கட்டணங்கள் குறைப்பு

Byadmin

Jul 14, 2024

மேல் மாகாணத்தில் நாளை (15) முதல் முச்சக்கரவண்டிக் கட்டணங்கள் குறைக்கப்படவுள்ளதாக அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.
அதன்படி இரண்டாவது கிலோமீட்டருக்கு இதுவரை அறவிடப்பட்ட 100 ரூபா 90 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் லலித் தர்மசேகர குறிப்பிட்டார்.
கொழும்பில் இன்று (14) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
“மேல் மாகாணத்தில் முச்சக்கர வண்டியில் பயணிப்பவருக்கு முதல் கிலோமீட்டருக்கு அதிகபட்சமாக 100 ரூபா கட்டணம் அறவிடப்படும். இரண்டாவது கிலோ மீட்டருக்கு 90 ரூபா. இரவு 10 மணிக்குப் முதல் காலை 05 மணி வரை இந்தத் தொகையுடன் 15% சேர்க்கப்படும் என்று கூறப்பட்டது. அந்த கட்டணத்தை மீட்டரில் கணக்கிடுவதில் உள்ள சிரமங்கள் இருப்பினும், ஏதேனும் அநியாயம் நடந்தால், சரியான தகவல்களுடன்  காவல்துறைக்கும், பயணிகள் போக்குவரத்து ஆணைக்குழுவுக்கும், நுகர்வோர் விவகார அதிகாரசபைக்கும் பயணிகள் தகவல் தெரிவிக்கலாம், எனவே இந்த தொழிலில் ஈடுபடுவோர் நேர்மையுடன் செயற்பட வேண்டும் இல்லையேல் மக்களுக்கு முச்சக்கரவண்டி தேவை எவ்வளவு முக்கியமானதாக இருந்தாலும், அது டைனோசர் போல் அழிந்து போவதைத் தடுக்க முடியாது.” என்றார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *