சீமெந்து, கம்பி உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களின் விலைகள் வீழ்ச்சியடைந்து வருவதால், கட்டுமானப் பணிகளை மீண்டும் தொடங்குமாறு தேசிய கட்டுமானத் தொழிலாளர் சங்கம், பொது மக்களிடம் கோரியுள்ளது.
கடந்த காலத்தில் இலங்கை எதிர்கொண்ட பொருளாதார நெருக்கடியுடன், ரூபாயின் பெறுமதி வீழ்ச்சி மற்றும் பல காரணிகளால் கட்டுமானத் துறையின் பொருட்கள் மற்றும் மூலப்பொருட்களின் விலைகள் வேகமாக அதிகரித்திருந்தன.
எவ்வாறாயினும், பொருளாதாரம் மீட்சியடைந்துள்ள நிலையில், தற்போது அவற்றின் விலையில் வீழ்ச்சி காணப்படுவதாக தேசிய கட்டுமான தொழிலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
கட்டுமான மூலப்பொருட்களின் விலைகள் குறைந்தன
