நுகர்வோர் அதிகார சபை வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு!

Byadmin

Jun 8, 2024

நுகர்வோர் அதிகார சபையில் விசாரணை அதிகாரிகளுக்காக ஏற்பட்டுள்ள வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ நேற்று (07) பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது தெரிவித்தார். 
நுகர்வோர் அதிகார சபையில்  நாடு முழுவதும் 277 பேர் மாத்திரமே  காணப்பட்டதாக அமைச்சர் குறிப்பிட்டார். 

அத்தொகை போதுமானது அல்ல என்றும் புதிய ஆட்சேர்ப்புகள் இடம் பெறுவதுடன் அதற்காக அவசியமான நடவடிக்கைகளை எதிர்வரும் மாதங்களுக்குள் எடுக்கவுள்ளதாகவும் அமைச்சர் நவீன் பெர்னாண்டோ கூறினார்.

எரிபொருள் உட்பட பொருட்களின் விலை குறைவடைந்து காணப்படுவதுடன் அதன் பலன் நுகர்வோருக்குக் கிடைக்காமையை சுட்டிக்காட்டிய பாராளுமன்ற உறுப்பினர் சுமித்  உடுக்கும்புற  வாய்மொழி மூலமாகக்  கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு சுட்டிக்காட்டினார்.

சரளமாக்கப்பட்ட  ஒரு சந்தை நாட்டினுள் காணப்படுவதனால் நுகர்வோர் அசாதாரணங்களுக்கு உட்படுவதாகவும்  பொருளாதார மந்தநிலை மற்றும் கோவிட்களுக்குப் பிறகு வியாபாரிகள் அதிக இலாபத்தை பெரும் செயற்பாடு இடம்பெற்றதாகவும் அமைச்சர் விபரித்தார்.

நுகர்வோர் சட்டம் 20 வருடங்களாக திருத்தப்படவில்லை என்றும் தற்போது காணப்படும் சட்டத்தை மாற்றி அமைத்து அமைச்சரவை அனுமதியை பெற்றுக் கொள்வதற்கு  சட்டமா அதிபருக்கு தற்போது அனுப்பப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெளிவுபடுத்தினார்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *