சிறுவனை தாக்கிய விவகாரம் – அனைவரும் விளக்கமறியலில்

Byadmin

Jun 5, 2024

சமூக ஊடகங்களில் பரவிய சிறுவனை தாக்கிய சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் மற்றும் இரண்டு பெண் சந்தேகநபர்கள் உட்பட அனைவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களை பதவிய நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியதன் பின்னர் எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், தாக்குதலுக்கு உள்ளான சிறுவன் நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு பிரிவில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
சிறுவனை தாக்கிய சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் இன்று (05) அதிகாலை புல்மோட்டை அரிசிமலை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
45 வயதுடைய ஆண் ஒருவரும் 37 மற்றும் 46 வயதுடைய இரண்டு பெண்களுமே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் வெலிஓயா கல்யாணபுர பிரதேசத்தில் வசிப்பவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *