50 கிலோமீட்டர் நடந்துசென்ற தாய் – இலங்கையில் நெகிழ்ச்சி

Byadmin

May 18, 2024

50 கிலோமீட்டர் நடந்துசென்ற தாய் – இலங்கையில் நெகிழ்ச்சி

தன்னுடைய பிள்ளைக்கு இருக்கும் பிரச்சினையில் இருந்து அவரை காத்துக்கொள்ள நேர்த்திக்கடன் வைத்து நீண்ட தூரம்(50 கிலோமீட்டர்) கால்நடையாக சென்ற தாயொருவர் பேசு பொருளாகியுள்ளார்.

மாங்குளத்தில் இருந்து மல்லாவி போகும் வழியில்  இருக்கும் தன் வீட்டில் இருந்து முல்லைத்தீவு அளம்பில் ஆறாம் கட்டை வரை கால் நடையாக சென்று நேர்த்திக்கடன் செய்துள்ளார்.

மதிய நேரத்தில் காபைற் வீதி வழியே வெறும் கால்களுடன் தாயொருவர் நடந்து செல்வதை கண்ணுற்று அவருக்கு உதவிடச் சென்ற போது தான் அவர் தன் நேர்த்திக்கடன் பற்றி பேசியிருந்ததாக சமூகவிட ஆய்வுகளில் ஆர்வம் காட்டிவரும் ஒருவர் குறிப்பிட்டிருந்தார்.

தன் பிள்ளைக்காக நீண்ட தூரத்தினை கால்நடையாக நடந்து சென்றிருந்த அந்த அம்மாவின் கால்கள் கொப்பளம் போட்டிருந்ததை அவதானிக்க முடிந்திருந்தது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *