இலங்கையில் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளதாக சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன.
அதன்படி, இன்று (11) காலை கொழும்பு செட்டியார் தெரு தங்க விற்பனை நிலையங்களில் ஒரு பவுன் 22 கரட் தங்கத்தின் விலை ரூ. 177,600 ஆக அதிகரித்துள்ளது.
ஒரு பவுன் 22 கரட் தங்கத்தின் விலை நேற்று (10) 175,700 ரூபாவாக பதிவாகியிருந்தது.
இதேவேளை, நேற்று 191,000 ரூபாவாக இருந்த ஒரு பவுன் 24 கரட் தங்கத்தின் விலை இன்று 2,000 ரூபாவினால் அதிகரித்து 193,000 ரூபாவாக பதிவாகியுள்ளதாக கொழும்பு செட்டியார் தெரு தங்க விற்பனை நிலைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தங்கத்தின் விலை 193,000/=
