இலங்கையில் நடைபெற்ற, வித்தியாசமான நிகாஹ் (படங்கள்

Byadmin

May 10, 2024

எம் நிகாஹ் வைபவம் 09.05.2024 அன்று ஹெம்மாதகமை தாருல் ஹஸனாத் சிறுவர் பராமரிப்பு இல்லத்தில் மன மகிழ்வுடன் நடைபெற்றது. 

நம் சமூகம் பசியில்லாத இடத்திலே அதிகம் விருந்து வழங்குகிறது.” 

“இதுவரை ஓர் திருமண வைபவம் எப்படி நடக்கும் என்பதை வாழ்விலே பார்த்தே இல்லாத இந்த சிறுவர்களிடத்தில் இது ஓர் முதல் வைபவம்” 

-சிறுவர் பாராமரிப்பு இல்லத்தின் தலைவர் ஸாலிம் ஹஸ்ரத்-

இது போன்ற புனித இடத்தில் நடைபெற்ற இந்நிகழ்வு எனக்கும் என் குடும்பத்தினருக்கும் கிடைத்த மிகப்பெரும் பாக்கியம் என்ற உணர்வை ஏற்படுத்தியது.  அல்ஹம்துலில்லாஹ்!

நம் வீடுகளில் கோலாகலமாக நடைபெறும் வைபவங்களில், உறவுகளுக்காவும், அன்புக்காகவும் ஏங்கும் அனாதைகள்; ஆதரவற்ற முதியோர்களையும் இணைப்பது பெரும் தர்மமாக அமையும்.

இறைவன் எமது எண்ணங்களையும், செயல்களையும், உறவுகளையும் ஏற்றுக்கொள்வானாக.

எமது நண்பர், அயலவர், உறவினர்களுக்கான வலீமா வைபவம் டிசம்பர் மாதம் வைப்பதற்கு தீர்மானித்து இருக்கின்றோம், இன்ஷா அல்லாஹ்!

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *