நாளொன்றுக்கு 52 கோடி ரூபாவை நாசமாக்கும் இலங்கையர்கள்

Byadmin

Apr 30, 2024

இலங்கை மக்கள் புகைபிடிப்பதற்காக நாளொன்றுக்கு 52 கோடி ரூபாவை செலவிடுவதாக அதிர்ச்சிகரமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. 

மதுபானம் மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் மேற்குறித்த தகவலை தெரிவித்துள்ளது. 

மேலும், புகைப்பழக்கம் காரணமாக நாளாந்தம் சுமார் 50 பேர் அகால மரணமடைவதாக கண்டறியப்பட்டுள்ளது. 

இந்நிலையில், இலங்கையில் வருடாந்தம் 2,300 பில்லியன் புகையிலை வடிகட்டிகள் சுற்றுச்சூழலுக்கு கழிவாக வெளியேற்றப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *