வீதியை கடக்கமுயன்ற குழந்தையை மோதித்தள்ளிய ​இளநீர் லொறி

Byadmin

Apr 7, 2024

இரண்டரை வயது குழந்தை வீதியை கடக்கமுயன்ற போது, ​இளநீர் ஏற்றிக்கொண்டுவந்த லொறியொன்று மோதியதில் அக்குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அம்பாறையில் இடம்பெற்றுள்ளது.

அம்பாறை இகினியாகல நாமல் ஓயா ஏரியின் ஆரம்ப பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் படுகாயமடைந்த  குழந்தை இகினியாகல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டது. எனினும், குழந்தை ஏற்கெனவே உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்துள்ளார். விபத்து தொடர்பில் இளநீர் லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *