இப்படியும் ஒரு, பாடசாலை அதிபர்

Byadmin

Mar 19, 2024

பாடசாலை அதிபர் ஒருவரின் செயற்பாடு குறித்து பெற்றோர் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளது.

வீதியில் கஞ்சி விற்று கிடைத்த வருமானத்தில் ஒரு மாதத்திற்குள் சிறிய விளையாட்டு மைதானம் ஒன்று தயார் செய்யப்பட்டு, வருடாந்த இல்ல விளையாட்டு போட்டி சிறப்பாக நடத்தப்பட்டுள்ளது.

காலி இமதுவ ஸ்ரீ குணரத்ன ஆரம்ப பாடசாலையின் அதிபரின் செயற்பாட்டினால் இந்த நெகிழ்ச்சியான செயல் ஏற்பட்டுள்ளது.

கல்லூரியின் 67 ஆண்டுகால வரலாற்றில் நடைபெறும் முதல் விளையாட்டுப் போட்டி இதுவாகும். காலி இமதுவ ஸ்ரீ குணரத்ன ஆரம்ப பாடசாலை 1957 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.

பல குறைபாடுகளுக்கு மத்தியில் இப்பாடசாலை நீண்டகாலமாக மூடப்படும் அபாயத்தில் இருந்தது.

10 ஆண்டுகளுக்கு முன் இப் பாடசாலையின் அதிபராக பத்மசிறி பாடசாலைக்கு புதிய சகாப்தத்தை உருவாக்கும் நோக்கில் பொறுப்பேற்றுக் கொண்டார்.

அதற்கமைய, பாடசாலைக்கு குறையாக விளையாட்டு மைதானம் அமைக்கும் பணி கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் பாடசாலை சமூகம் எதிர்கொண்ட மிகக் கடுமையான சவாலாக நிதி காணப்பட்டுள்ளது.

அதற்கமைய, பிரதான வீதியின் இருபுறங்களிலும் பெற்றோர்கள் தமது பிள்ளைகளுடன் சேர்ந்து கஞ்சி விற்று, அதன் மூலம் கிடைக்கும் பணத்தை கொண்டு, விளையாட்டு மைதானம் அமைக்கும் பணியை முன்னெடுத்திருந்தனர்.

பாடசாலையின் அதிபர் மற்றும் பெற்றோரின் சிறப்பான செயற்பாடு குறித்து சமூக வலைத்தளங்களில் பாராட்டு தெரிவிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *