மின் கட்டணத்தை குறைத்தால் ஏற்படப்போகும் சிக்கல்

Byadmin

Feb 21, 2024

உறுதியளித்தபடி மின்சார கட்டணத்தை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
எவ்வாறெனினும் பராமரிப்பு நடவடிக்கைகளை தாமதப்படுத்த வேண்டி வரும் என அதன் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொது முகாமையாளர் நோயல் பிரியந்த தெரிவித்துள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர், “தேவையான பராமரிப்பை மட்டும் செய்துவிட்டு, மற்றவற்றை நகர்த்திச் செல்லுமாறு பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு கூறியது. அந்த ஆணைக்குழு வழங்கிய அறிவுறுத்தலின்படி நாம் அதனை தயார் செய்தோம். பராமரிப்பு நடவடிக்கைகளை நகர்த்தியுள்ளோம். இவ்வாறான நிலைக்கு வந்தால் சரிந்த பின்னர் மீண்டும் கட்டியெழுப்பவது கடினம் என்றார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *