மத்ரஸா மாணவன் மரணம் – சந்தேகநபர்களின் விளக்கமறியல் காலம் நீடிப்பு!

Byadmin

Dec 22, 2023

மத்ரஸா பாடசாலை மாணவனின் மர்ம உயிரிழப்பு தொடர்பில் கைதான மௌலவியை மீண்டும்  14 நாட்கள்  எதிர்வரும் ஜனவரி  மாதம் 04 திகதி வரை விளக்கமறியலில்   வைக்குமாறு கல்முனை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த வழக்கு   நேற்று (21)  கல்முனை நீதிமன்ற நீதவான் எம்.எஸ்.எம் சம்சுதீன்   முன்னிலையில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போது நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். 
 இதேவேளை, உயிரிழந்த சிறுவனின் மரணம் தொடர்பில் கைதான அப்பாடசாலையின் மேற்பார்வையாளரான பெண்ணை 14 நாட்கள் விளக்கமறியலில்   வைக்குமாறும்  வழக்கை எதிர்வரும்  ஜனவரி  மாதம் 04 ஆம்  திகதி வரை ஒத்தி  வைக்குமாறு கல்முனை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த வழக்கு விசாரணைக்கு   எடுத்து கொள்ளப்பட்ட போது மரணமடைந்த சிறுவனின் தந்தை, சகோதரி ஆகியோர் நீதிமன்ற வளாகத்திற்கு வருகை தந்திருந்ததுடன்   பொலிஸார் மற்றும் பிரதிவாதியின் சட்டத்தரணி ஆகியோரின் விண்ணப்பங்கள் ஆராயப்பட்டு  28 வயதுடைய  குறித்த பாடசாலையின் மேற்பார்வையாளரான பிறின்ஸி புழேந்திரன் என்பவரை மீண்டும்  விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *