கைதான இந்திய மீனவர்கள் நிபந்தனையுடன் விடுவிப்பு

Byadmin

Dec 21, 2023

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரை நிபந்தனையின் அடிப்படையில் விடுதலை செய்ய மன்னார் நீதவான் நீதிமன்றம்  நேற்று (20) உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த மாதம் 6 ஆம் திகதியன்று இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படையினர், தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கைது செய்தனர்.
கைதான 8 மீனவர்களும் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர்  விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.  
இந்நிலையில், குறித்த மீனவர்கள்  நேற்று (20) மீண்டும் மன்னார் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
இதன் போது விசாரணைகளை மேற்கொண்ட நீதவான் ‘ நிபந்தனையின் கீழ் அவர்களை விடுதலை செய்தார்.  
இதனைத் தொடர்ந்து விடுவிக்கப்பட்ட மீனவர்கள், இந்தியத் துணைத் தூதரக அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *