எதிர்வரும் தேர்தலில் பொதுஜன பெரமுன நிச்சயம் வெற்றிபெறும் என பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பொதுஜன பெரமுனவின் விஷேட பொது மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர் மேலும் தெரிவிக்கையில், “நம்முடைய அரசாங்கத்தை ஸ்தாபிக்க தயாராவோம்…” என்றார்.
துணிச்சலான அரசாங்கத்தை உருவாக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என வலியுறுத்திய பசில் ராஜபக்ஷ, இந்த நாட்டு மக்களை மரண பயத்தில் இருந்து காப்பாற்றிய ஒரே தலைவர் மஹிந்த ராஜபக்ஷ என கூறினார்.
பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் மாநாட்டிற்கு வருகை தந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்த பசில் ராஜபக்ஷ, பாதுகாப்பாக கிராமங்களுக்கு செல்வீர்கள் என நம்புவதாகவும் தேவையான பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
“உங்கள் அனைவரிடமும் எனக்கு ஒரு வேண்டுகோள் உள்ளது, கிராமத்திற்கு செல்லும்போது, மஞ்சள் கோடு தவிர வேறு எந்த இடத்திலும் வீதியை கடக்க வேண்டாம்.
சமூக ஊடகங்கள் நமது ஏதாவது ஒரு தவறை பிடித்துக் கொள்ள காத்திருக்கின்றன.
எனவே மகிந்த ராஜபக்ச எமக்கு கற்பித்த மாபெரும் பாடத்தை மிக ஒழுக்கத்துடன் எடுத்துக்கொண்டு எமது கட்சியை முன்மாதிரியான கட்சியாக கொண்டு எதிர்காலத்தில் செயற்படுவோம்.
இதனால் நாம் கோழைகள் என்று நினைக்காதீர்கள். வீதியில் ஓடும் நாயின் மீது கல்லை எறிந்தால் நாய் குரைத்து விட்டு வேகமாக ஓடும்.
ஆனால் சிங்கத்தின் மீது கல்லை எறிந்தால் யார் கல்லை எறிந்தார்கள் என்று பார்க்கும்.
நாமும் அப்படித்தான். எங்களை கல்லால் அடிக்காதீர்கள். நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்…”
“துணிச்சலான அரசாங்கத்தை உருவாக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும்” – கட்சி மாநாட்டில் பசில்!
