கொழும்பு தேசிய வைத்தியசாலையில் புதிய சிக்கல்

Byadmin

Dec 7, 2023

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் மூன்றாம் மாடியில் உள்ள ஆய்வுகூடத்தில் குளிரூட்டும் முறைமை பராமரிக்கப்படாத காரணத்தினால், அதன் நிர்வாகம் நோயாளிகளை திருப்பி அனுப்பியுள்ளதாக சுகாதார நிபுணர்கள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
இது தொடர்பில், கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ருக்ஷான் பெல்லனவிடம் வினவிய போது, ​​குளிரூட்டும் அமைப்பில் ஏற்பட்ட வாயுக் கசிவு காரணமாக இந்தப் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
அண்மைய நாட்களில் பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டாலும் வாயுக் கசிவு அப்படியே இருப்பதாக அதன் பராமரிப்பை மேற்கொள்ளும் சீன நிறுவனம், மருத்துவரிடம் தெரிவித்துள்ளது.
அதன்படி, குளிர்சாதன அமைப்பை மீட்டெடுக்க இரண்டு நாட்கள் அவகாசம் தருமாறு சீன நிறுவனம் கோரிக்கை விடுத்ததாக அவர் கூறினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *