வீடு திரும்பிய டயானா கமகே

Byadmin

Oct 21, 2023


பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் தாக்குதல் சம்பவத்தின் பின்னர் ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த இராஜாங்க அமைச்சர் டயானா கமகே, சிகிச்சையின் பின் வைத்தியசாலையில் இருந்து வீடு திரும்பியுள்ளார்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 3 மணித்தியாலங்களில் அவருக்கு உரிய சிகிச்சை வழங்கப்பட்ட நிலையிலேயே அவர் மீண்டும் வீடு திரும்பியுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பாராளுமன்ற வளாகத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய் பெரேரா தம்மை தாக்கியதாக கூறி இராஜாங்க அமைச்சர் டயானா கமகே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *