இலஞ்சம் பெற்ற அதிகாரி கைது
குருநாகல் – பௌத்தலோக பகுதியில் 50,000 ரூபாய் இலஞ்சம் பெற்ற மதிப்பீட்டு அதிகாரி ஒருவர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார். முறைப்பாட்டாளரின் பெயரில் பதிவு செய்யப்பட்ட அறுதி காணி தொடர்பான பத்திரத்திற்கு அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய முத்திரைத் தொகையை குறைப்பதற்காக…
அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு
லங்கா சதொச நிறுவனத்தினால் பல அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. அதன்படி, 1 கிலோகிராம் சிவப்பு சீனியின் விலை 8 ரூபாயால் குறைக்கப்பட்டுள்ள நிலையில் அதன் புதிய விலை 277 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 1 கிலோகிராம் சிவப்பு பருப்பு 4…
பால்மா விலையில் மாற்றம்
எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் பால் மாவுப் பொருட்களின் விலையை 4.7 வீதத்தால் அதிகரிப்பதற்கு இறக்குமதியாளர்கள் தீர்மானித்துள்ளனர். அதன்படி, இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால் மா பக்கற்றின் விலை சுமார் 50 ரூபாவால்…
பதனழிந்த ஐஸ்கிறீம் விற்பனை
நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் மேற்பார்வையில் பொது சுகாதார பரிசோதகர் நிர்மலானந்தன் அவர்களின் ஆலோசனைக்கும் வழிகாட்டலிக்கும் அமைய, அங்காடி உணவகங்கள் மற்றும் தேநீர்சாலை என்பன தொடர்ச்சியாக பரிசோதிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் நல்லூர் பொது சுகாதார பரிசோதகர் ம.அனுசூதனன் தலைமையிலான…
ஜனாதிபதி வாகனத்தில் வெடிபொருள்
ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்த லேண்ட்க்ரூஸர் வகை வாகனத்துடன் விமானப்படை கோப்ரல் உட்பட இருவரை வெடிப் பொருட்களுடன் திங்கட்கிழமை (17) அதிகாலை கைது செய்துள்ளதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்தனர். வெல்லாவெளி பாலையடிவட்டை வீதியில் திங்கட்கிழமை (17) அதிகாலை 3. மணியளவில் பயணித்த…
மான்களை பார்வையிட்டுக் கொண்டிருந்த தம்பதியை மிரட்டி, கொள்ளையிட்டு சென்ற கும்பல்
கார், பணம் மற்றும் தங்க நகைகளைத் கொள்ளையிட்ட இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று (16) பிற்பகல் திருகோணமலை சங்கமித்தா கடற்கரைக்கு அருகிலுள்ள மான்களை பார்வையிடும் இடத்திற்கு சென்றிருந்த தம்பதியினரை அங்கு காரில் பிரவேசித்த மூன்று பேர் மிரட்டி, அவர்களின்…
சுற்றுலாப் பயணி ஒருவர் மாரடைப்பால் உயிரிழப்பு
சீகிரியாவைப் பார்வையிடச் சென்ற சுற்றுலாப் பயணி ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். 78 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த நபருக்கு திடீர் சுகவீனம் ஏற்பட்டதன் காரணமாக சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிராண்ட்பாஸ் இரட்டை கொலை; 8 பேர் கைது
கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவின் ஜபோஸ்லேன் பகுதியில் சமீபத்தில் இரண்டு இளைஞர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சந்தேக நபர்கள் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சனிக்கிழமை (15) அதிகாலையில் இடம்பெற்ற இரட்டைக் கொலை சம்பவம் தொடர்பில் கிராண்ட்பாஸ் பொலிஸார் நடத்திய விசாரணைகளைத்…
அம்பாறை மாவட்டத்தில் வயல்களில் சஞ்சரிக்கும் காட்டு யானைகள்
அம்பாறை மாவட்டத்தின் மாவடிப்பள்ளி வயல் கண்டங்களில் காட்டு யானைகள் சஞ்சரிப்பதை பிரதேச வாசிகள் அவதானித்து வருகின்றனர். அப்பகுதியில் பெரும்போக நெற் பயிர் செய்கை அறுவடை முடியும் தருவாயில் உள்ள இந்நிலையில் காட்டு யானைகள் கூட்டம் அப்பகுதியில் காணமுடிகின்றது.
ரயில் சேவைகளில் தாமதம்
பாணந்துறை ரயில் நிலையத்திற்கு அருகில் ரயில் ஒன்றில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக கரையோர வழித்தடத்தின் ரயில் சேவைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தொழில்நுட்பக் கோளாறுக்கு உள்ளான ரயிலில் பயணித்த பயணிகள், வேறொரு ரயில் மூலம் பாணந்துறை ரயில் நிலையத்திற்கு அழைத்துச்…
