இல்லத்தரசிகளால் உப்பு , புளி ருசி பார்க்க முடியவில்லை
சமீப சில நாட்களாக தங்களால் சமையலில் உப்பு, புளி ருசி பார்க்க முடியவில்லை என்று இல்லத்தரசிகள் முகம் சுழிக்கின்றனர். உப்புப் புளி தட்டுப்பாட்டால் அடுக்களைச் சமையல் கசந்துள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். நாட்டில் தற்போது உப்பு, புளியம்பழம் ஆகிய சுவையூட்டிகளுக்கு கடும் தட்டுப்பாடும்…
கஞ்சாப் பொதிகளுடன் ஒருவர் கைது
கிளிநொச்சி, புளியம்பொக்கணைப் பகுதியில் சட்டவிரோதமாக வாகனம் ஒன்றில் மறைத்துக் கொண்டு செல்லப்பட்ட ஒரு கோடி 60 லட்சம் ரூபா பெறுமதியான கஞ்சாப் பொதிகள் மீட்கப்பட்டன. அதனை மறைத்துச் சென்ற வாகனமும் கைப்பற்றப்பட்டதுடன் சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று (16) பகல்…
குறுஞ்செய்தி வந்தால் துண்டிக்கவும்
இலங்கை மின்சார சபை (CEB) சூரிய மின்சக்தி அமைப்பு உரிமையாளர்களை இன்று முதல் தங்கள் அமைப்புகளை தற்காலிகமாக துண்டிக்குமாறு கேட்டுக்கொள்கிறது. ஆனால் மின்சார சபையிடமிருந்து அதிகாரப்பூர்வ குறுஞ்செய்தி அறிவிப்பு கிடைத்தால் குறிப்பிட்ட நாளில் பிற்பகல் 3 மணி வரை மட்டுமே துண்டிக்குமாறு…
இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு!
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி கடந்த வாரத்துடன் ஒப்பிடும்போது, இன்று (16) சற்று அதிகரிப்பைப் பதிவுசெய்துள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்று (16) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி,அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 293 ரூபாய்…
வெள்ளவத்தையை சேர்ந்த இருவர் பெருந்தொகை பணத்துடன் கைது
பணம் தூய்மையாக்கல் மற்றும் பண தூய்மையக்கலுக்கு உதவிய குற்றத்திற்காக இரண்டு சந்தேக நபர்கள் 5,745,000 ரூபாய் பணத்துடன் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 13ஆம் திகதி இந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள்…
ஐஸ் போதை பொருளுடன் ஒருவர் கைது
அம்பாறை இறக்காமம் பிரதேசத்தில் 810 கிராம் ஐஸ் போதைப் பொருளுடன் வியாபாரி ஒருவரை செவ்வாய்க்கிழமை (15) இரவு கைது செய்துள்ளதாக இறக்காமம் பொலிசார் தெரிவித்தனர் அம்பாறை விசேட புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினருடன்…
அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகம்
கடல்சார் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கும், கடலில் ஏற்படும் அவசர நிலைமைகளின் போது விரைவான நடவடிக்கைகளை உறுதி செய்வதற்கும், இலங்கை கடலோர பாதுகாப்பு திணைக்களம் (SLCG), அதன் செயல்பாட்டு அறையுடன் நேரடியாக இணைக்கப்பட்ட 24 மணி நேர விசேட அவசர தொலைபேசி இலக்கமான ‘106’…
வாக்காளர் அட்டைகள் தபால் நிலையங்களுக்கு விநியோகம்
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகள் இன்று அஞ்சல் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படுமெனத் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அஞ்சல் மூல வாக்காளர்களுக்கான வாக்காளர் அட்டைகள் ஏற்கனவே அஞ்சல் திணைக்களங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. இந்தநிலையில், சுமார் 250 உள்ளூராட்சி நிறுவனங்களில் திட்டமிட்டபடி மே மாதம் ஆறாம்…
இரு இளைஞர்கள் மாயம்; ரஷ்ய தம்பதிகள் மீட்பு
பானம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பானம பகுதி கடலில் நீந்திக் கொண்டிருந்த 2 இளைஞர்கள் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர். இந்த சம்பவம் நேற்று (15) மாலை இடம்பெற்றதாக பானம பொலிஸார் தெரிவிக்கின்றனர். காணாமற்போன இளைஞர்கள் 23 வயதுடையவர்கள் எனவும் இவர்கள்…
T56 ரக துப்பாக்கியொன்று பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது
யாழ்ப்பாணம் குருநகர் கடற்கரைப் பகுதியில் நேற்று (15) இரவு T56 ரக துப்பாக்கியொன்று பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய நடத்தப்பட்ட சோதனையில் மேற்படி ஆயுதம் மீட்கப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட துப்பாக்கி பாவிக்கக்கூடிய நிலையில்…
