Editor 2

  • Home
  • தீப்பற்றி எரிந்த டிப்பர்

தீப்பற்றி எரிந்த டிப்பர்

தெஹிவளை – ஹில் வீதியில் பயணித்து கொண்டிருந்த டிப்பர் வாகனமொன்று திங்கட்கிழமை (23) மாலை திடீரென தீப்பற்றி எரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தீயணைப்பு படையினர் தீ பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இதில் எவருக்கும் எந்தவித காயங்களும் ஏற்படவில்லை என பொலிஸார்…

ஆமைகளை இறைச்சியாக்கிய பெண்கள் கைது

வனவிலங்கு சரணாலயத்திற்குள் பதின்மூன்று ஃபிளாப்ஷெல் ஆமைகளை (கிரி இப்பா) பால் ஆமைகளை கொன்று அவற்றை சாப்பிடுவதற்குத் தயாரித்ததற்காக மூன்று பெண்கள் கைது செய்யப்பட்டதாக பொலன்னறுவை வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரி தெரிவித்தார். வனவிலங்கு அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை (24) பிற்பகல் நடத்திய சோதனையின் போது…

நீதியமைச்சரை சந்தித்தார் வோல்கர் டர்க்

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் வோல்கர் டர்க் மற்றும் நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார ஆகியோருக்கு இடையேயான சந்திப்பு கொழும்பில் செவ்வாய்க்கிழமை (24) நடைபெற்றது. பிரதம நீதியரசர், ஜனாதிபதி வழக்கறிஞர்…

பகிடிவதை செய்த ஒலுவில் மாணவர்கள் இடைநீக்கம்

முதலாமாண்டு மாணவர்களை பகிடிவதை செய்த ஒலுவில் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 22 மாணவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக குறித்த பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் எஸ்.எம். ஜுனைதீன் தெரிவித்தார். இந்த சம்பவம் குறித்து முறையான விசாரணை நடத்த பல்கலைக்கழக பேராசிரியர்கள் கொண்ட ஒரு சிறப்புக் குழு…

உள்ளூராட்சி நிறுவனங்களை கைப்பற்றிய திசைக்காட்டி

தேசிய மக்கள் சக்தி 200 உள்ளூராட்சி நிறுவனங்களின் அதிகாரத்தைப் தற்போது பெற்றுள்ளது. தனமல்வில பிரதேச சபை மற்றும் பலாங்கொடை நகர சபையை கையகப்பற்றியதன் மூலம், நேரடியாக கையகப்பற்றப்பட்ட 151 நிறுவனங்கள் உட்பட 200 உள்ளூராட்சி நிறுவனங்களின் அதிகாரத்தை தேசிய மக்கள் சக்தி…

குடும்பப் பெண் படுகொலை – சகோதரிகள் கைது

கொடூரமாக கொலை செய்யப்பட்டு சடலமாக மீட்கப்பட்ட குடும்பப் பெண்ணின் படுகொலை தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் சகோதரிகளான இரட்டையர் கைது செய்யப்பட்டுள்ளனர். அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விஷ்ணு கோயில் வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் தனித்திருந்த 38 வயது மதிக்கத்தக்க…

கட்டாரில் உள்ள இலங்கையர்களுக்கு அறிவிப்பு

கத்தாரில் உள்ள இலங்கையர்கள் வீட்டிலேயே இருக்கவும், எச்சரிக்கையாக இருக்கவும் என கத்தாரில் உள்ள இலங்கை தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. அரசாங்கம் மற்றும் தூதரகம் வெளியிட்டுள்ள அறிவுறுத்தல்களை கண்டிப்பாக பின்பற்றவும் என்றும் அலுவலகம் அறிவுறுத்தியுள்ளது. ஏதேனும் அவசரநிலை ஏற்பட்டால், 9471-182587 என்ற எண்ணை தொடர்பு…

இஸ்ரேல் செல்லவுள்ள இலங்கையர்களுக்கான அறிவிப்பு

மத்திய கிழக்கு போர் மோதல்களால் இஸ்ரேலுக்கு வருவதற்கு திட்டமிட்டிருந்த வெளிநாட்டினர் தங்கள் பயணத்தை தற்காலிகமாக தள்ளி வைக்க நேரிட்டதை அடுத்து, இஸ்ரேலின் மக்கள் குடிவரவு மற்றும் குடியகல்வு ஆணையம் (PIBA) அவர்களது RE-ENTRY விசா காலத்தை நீட்டிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக இஸ்ரேலுக்கான…

போர் நிறுத்தம் அமுலில் உள்ளது..!

இஸ்ரேல் – ஈரான் இடையிலான போர் அமலுக்கு வந்துள்ளதாகவும் அதை தயவுசெய்து மீறவேண்டாம் எனவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். மத்திய கிழக்கு நாடுகளான இஸ்ரேல் – ஈரான் இடையிலான போர் உச்சகட்டத்தை எட்டிய நிலையில், ஈரானின் மூன்று…

இடியுடன் கூடிய மழை

மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும், மற்றும் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஊவா மாகாணம், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் சில இடங்களில் மழை…