Editor 2

  • Home
  • 12 வயது சிறுமி நீரில் மூழ்கி பலி

12 வயது சிறுமி நீரில் மூழ்கி பலி

ஒலுவில் பிரதேசத்தில் நீர் குட்டை ஒன்றில் குளிக்கச் சென்ற, ஒலுவில் 04 ம் பிரிவைச் சேர்ந்த, 12 வயது எவ்.பாத்திமா ஹிக்மா நீரில் மூழ்கி இறந்துள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர். தென்கிழக்கு பல்கலைக்கழகத்துக்கு அருகாமையில் உள்ள நீர் குட்டையில் செவ்வாய்க்கிழமை (22)…

கட்டுப்படுத்தப்பட்ட சிறைச்சாலை பதற்றம்

மாத்தறை சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை நிலைமை தற்போது கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சிறைச்சாலையில் உள்ள இரு கைதிகள் குழுக்களுக்கு இடையே இந்த மோதல் ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இதனைக் கட்டுப்படுத்துவதற்காக சிறைச்சாலை அதிகாரிகள் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி, கண்ணீர்ப்புகைத்…

தேர்தலுக்கு இ-சேவை

தபால் மூலம் வாக்களித்துள்ள வாக்காளர்கள், தாங்கள் நியமிக்கப்பட்ட வாக்குச்சாவடி மற்றும் சான்றளிக்கும் அதிகாரியைக் கண்டறிய உதவுவதற்காக ஒரு ‘இ-சேவை’ வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. தேர்தல் ஆணைக் குழுவின் கூற்றுப்படி, 2025ஆம் ஆண்டு உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை, அந்தந்த குழுக்கள்,…

நீர் குழியில் இருந்து சிறுவனின் ஜனாஸா

வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் பாதுகாப்பற்ற நீர் குழியில் இருந்து உயிரிழந்த நிலையில்மீட்கப்பட்ட சம்பவம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியான உடங்கா -02 பௌஸ் மாவத்தையில் செவ்வாய்க்கிழமை(22) மாலை இடம்பெற்றுள்ளது. மூன்று வயதுடைய முஹம்மத் லுக்மான் என்ற சிறுவனே…

இந்தியா காஷ்மிரில் சுற்றுலாப்பயணிகள் மீதான தாக்குதல்

இந்தியாவின் ஜம்மு மற்றும் காஷ்மிர் பிராந்தியத்தில் ஆயுததாரிகளெனச் சந்தேகிக்கப்படுவோர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 26 பேர் கொல்லப்பட்டதுடன், 17 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் இன்று தெரிவித்துள்ளனர். பிரபலமான பஹல்கம் பகுதியிலேயே நேற்று இத்தாக்குத்ல் இடம்பெற்றுள்ளது. 2008 மும்பை தாக்குதலுக்குப் பின்னர் பொதுமக்கள்…

நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை

புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாகமாத்தறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடியசாத்தியம் காணப்படுகின்றது. நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது…

கொரிய கடற்படை கப்பல் விஜயத்தின் போது இலங்கை

கொரியக் குடியரசின் நாசகார கப்பலான ‘காங் காம் சான்’ (ஏப்ரல் 22) கொழும்பு துறைமுகத்திற்கு வருகை தந்தது. உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேட்கொண்டு இன்று இலங்கைக்கு வந்தடைந்த கப்பலுக்கு கடற்படை சம்பிரதாயபூர்வ வரவேற்பு ஒன்று அளிக்கப்பட்டது. இன்று காலை நடைபெற்ற இவ்விழாவில் பாதுகாப்பு…

மோடியை வரவேற்ற, மொஹமட் பின் சல்மான்

ஜித்தாவில் உள்ள அல்-சலாம் அரண்மனையில் இந்தியப் பிரதமர் மோடியை சவுதி பட்டத்து இளவரசர் மொஹமட் பின் சல்மான வரவேற்கிறார். அங்கு அவருக்கு அதிகாரப்பூர்வ வரவேற்பு விழா நடைபெற்றது.

வெறும் வயிற்றில் வால்நட்ஸ் சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா?

நமது அன்றாட உணவில் நட்ஸ்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அதிலும் வால்நட்ஸ் அவற்றின் நறுமணம் மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட்கள் நிறைந்த இந்த வால்நட்ஸ் ஆனது, ஆன்டிஆக்ஸிடன்ட் மற்றும் ஆன்டி இன்ஃபிளமேட்டரி பண்புகளைக் கொண்டுள்ளன. இப்போது வெறும் வயிற்றில்…

விவசாயிகளுக்கு சுகாதார அமைச்சு விடுத்துள்ள எச்சரிக்கை

சிறுபோகத்திற்கான விவசாய நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு முன்னர் எலிக்காய்ச்சலிலிருந்து பாதுகாத்துக்கொள்ள சிகிச்சைகளை பெற்றுக்கொள்வது அத்தியாவசியமென சுகாதார அமைச்சு வலியுறுத்தியுள்ளது. இதற்கான மருந்துகளை பொது சுகாதார பரிசோதகர்கள் அல்லது அருகிலுள்ள சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் இலவசமாக பெற்றுக்கொள்ள முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. சிகிச்சைகளை பெற்றுக்…