Month: June 2025

  • Home
  • கொத்மலை – பூண்டுலோயா வீதியில் மண்சரிவு

கொத்மலை – பூண்டுலோயா வீதியில் மண்சரிவு

கொத்மலை – பூண்டுலோயா வீதியில் கல்கொரிய பகுதியில் மண்சரிவு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் குறித்த பகுதியூடான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தொல்லை கொடுத்தவரை வெட்டிக் கொன்று எரித்த பெண்கள்

இந்தியாவின் ஒடிசாவில், நீண்ட நாட்களாக பாலியல் தொல்லை கொடுத்து வந்த 60 வயது நபரை, பெண்கள் குழு ஒன்று கொன்று உடலை எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக 8 பெண்கள் உட்பட மொத்தம் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.…

மதுவரி அதிகாரிகள் கைது

மேல் மாகாண வடக்கு குற்றப்பிரிவு அதிகாரிகள் நடத்திய சோதனையில், இந்தியாவில் இருந்து படகு மூலம் நாட்டிற்கு சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட 1200 கிலோ கிராம் பீடி சுற்றும் இலைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. நீர்கொழும்பு பகுதியில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டதுடன், அவற்றை ஏற்றிச்…

விபத்திற்கு பின்னர் மீண்டும் தோன்றிய சுமேதா யானை!

கடந்த மார்ச் மாதம் மரதன்கடவல பகுதியில் நடந்த விபத்தில் சிக்கி பின்னர் காணாமல் போயிருந்த சுமேதா என்ற யானை, மின்னேரியா தேசிய பூங்காவில் உள்ள பதுபொல பகுதியில் சுமார் மூன்று மாதங்களுக்குப் பிறகு சுற்றித் திரிவதை ஒரு பார்வையாளர் தனது கையடக்க…

லொஸ் ஏஞ்சல்ஸில் ஊரடங்கு உத்தரவு

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் குடியேற்றக் கட்டுப்பாடுகளுக்கு எதிரான போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவு லொஸ் ஏஞ்சல்ஸ் நகர மையத்தின் ஒரு சிறிய பகுதியான 1 சதுர மைல் பரப்பளவில்…

மறு அறிவித்தல் வரை கடலுக்குச் செல்ல வேண்டாம்

கடற்படையினர் மற்றும் மீனவர்கள் மறு அறிவித்தல் வரை கடல் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த எச்சரிக்கை இன்று (11) பிற்பகல் 2.30 மணி வரை அமுலில் இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் அறிவித்துள்ளது.…

தமிழ்நாட்டில் சுற்றித் திரிந்த இலங்கையர்

தமிழகம் காரைக்கால் ரயில் நிலையத்தில் உரிய ஆவணங்கள் இன்றி சுற்றித் திரிந்த இலங்கை வாசியை பொலிஸார் கைது செய்துள்ளனர். காரைக்கால் ரயில் நிலையத்தில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போதே குறித்த இலங்கையர் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. கைது செய்யப்பட்டுள்ளவர்…

கப்பலில் தீவிரமடையும் தீப்பரவல்

இந்தியாவின் கேரள கடற்கரைக்கு அருகே சரக்குக் கப்பல் ஒன்றில் ஏற்பட்ட தீப்பரவல் தற்போது தீவிரமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கப்பல் நேற்று முன்தினம் தீப்பரவலுக்குள்ளான நிலையில் அதனை அணைக்கும் பணியில் இந்தியக் கடலோர காவல்படையினர் தொடர்ந்தும் ஈடுபட்டு வருகின்றனர். எனினும், தீ வேகமாகப்…

இன்று பலத்த மழை

மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் இன்று அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில…

10 மணிநேர நீர் வெட்டு

கம்பஹாவின் பல பகுதிகளில் இன்று 10 மணிநேர நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படும் எனத் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது. அதன்படி, காலை 8.30 முதல் மாலை 6.30 வரை பேலியகொட, வத்தளை, ஜா-எல மற்றும் சீதுவ…