Month: April 2024

  • Home
  • நாளொன்றுக்கு 2000/- சம்பளம் வேண்டும்!

நாளொன்றுக்கு 2000/- சம்பளம் வேண்டும்!

மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு குறைந்தபட்சம் இரண்டாயிரம் ரூபா சம்பளம் வழங்கப்பட வேண்டுமென்பதே எனது நிலைப்பாடாகும் என கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார்.பத்தரமுல்ல இசுருபாயவில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர்…

நியூசிலாந்தில் இலங்கையின் உயர்ஸ்தானிகராலயம்

நியூசிலாந்தின் வெலிங்டனில் இலங்கையின் உயர்ஸ்தானிகராலயம் ஒன்றை திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.அமைச்சரவையின் தீர்மானத்தின் படி, இலங்கைக்கான உயர்ஸ்தானிகராலயமொன்று நியூசிலாந்தின் வெலிங்டனில் திறக்க திட்டமிடப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.இது தொடர்பில் ஆராய்வதற்காக, வெளிவிவகார அமைச்சின் வெளிநாட்டு சொத்துக்கள் முகாமைத்துவம் மற்றும் அபிவிருத்திப் பிரிவின் பணிப்பாளர் நாயகம்…

பொது மன்னிப்பு காலம் அறிவிப்பு!

நீண்ட நாட்களாக விடுமுறையின்றி கடமைக்கு சமூகமளிக்காத இலங்கை இராணுவத்தின் இராணுவ வீரர்களுக்கு இன்று (20) முதல் பொது மன்னிப்பு காலம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பொது மன்னிப்பு காலம் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் என இராணுவம் தெரிவித்துள்ளது.…

ஓய்வு குறித்து சமரி முக்கிய அறிவிப்பு!

தனது கிரிக்கெட் பிரியாவிடை மிக விரைவில் நடைபெறும் என இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் தலைவர் சமரி அத்தபத்து தெரிவித்துள்ளார்.தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டியின் வெற்றியை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், அடுத்த ஆண்டு இடம்பெறவுள்ள மகளிர் ஒருநாள் உலகக்…

பிணை வேண்டாம் என கூறிய ஒட்டாவா கொலையாளி!

கனடாவின் ஒட்டாவாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட இலங்கை இளைஞன் தற்போதைக்கு பிணை கோருவதை எதிர்ப்பார்க்கவில்லை என அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.19 வயதான ஃபேப்ரியோ டி சொய்சா கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்…

உளுந்து வடை மற்றும் தேநீரை 800 ரூபாய்க்கு விற்பனை செய்த நபர் கைது

வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவருக்கு, உளுந்து வடை மற்றும் தேநீரை 800 ரூபாய்க்கு விற்பனை செய்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபரை, களுத்துறை நீதவான் நீதிமன்றில் இன்று (19) முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக களுத்துறை பொலிஸார் தெரிவித்தனர். மேற்படி வெளிநாட்டு சுற்றூலாப் பயணிக்கு சந்தேகநபர்,…

சு.க நெருக்கடிக்கு தேர்தல் ஆணைக்குழுவிடம் இருந்து பதில்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் நிலவும் உள்ளக பிரச்சினைகளை தீர்ப்பதற்கு தமது ஆணைக்குழுவுக்கு சட்டரீதியான அதிகாரம் இல்லை என தேர்தல்கள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.அக்கட்சியின் அரசியல் குழுவினால் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்ட தீர்மானங்கள் மற்றும் ஆவணங்கள் தொடர்பில் அதன் உறுப்பினர்களால் நேற்று (18) கலந்துரையாடப்பட்டதாக…

மரணத் தண்டனை கைதி 35 வருடங்களின் பின்னர் கைது!

நீதிமன்றில் மரண தண்டனை விதிக்கப்பட்டு 35 வருடங்களாக தலைமறைவாக இருந்த நபர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் படுகொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று (18) கைது செய்யப்பட்டுள்ளார்.மின்சார சபையின் பொறியாளர் ஒருவரை கொடூரமாக கொன்று உடலை துண்டுத் துண்டாக…

இலங்கை கிரிக்கெட்டை உயர்ந்த நிலைக்கு கொண்டு சென்றமைக்காக வாழ்த்துக்கள்!

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் தலைவி சாமரி அத்தபத்துவுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.தென்னாபிரிக்காவுக்கு எதிரான அபார வெற்றிக்கு ஜனாதிபதி சாமரி அத்தபத்துவுக்கு தனிப்பட்ட ரீதியில் வாழ்த்து தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.17 ஆம் திகதி தென்னாபிரிக்காவுக்கு…

எண்ணெய், தங்கத்தின் விலை சடுதியாக அதிகரிப்பு – பங்குச் சந்தைகளும் சரிந்தன

ஈரான் மீது இஸ்ரேல் நடத்தியுள்ள ஏவுகணை தாக்குதலின் பின்னர் உலக சந்தையில் எண்ணெய் மற்றும் தங்கத்தின் விலை சடுதியாக உயர்வடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பங்குகளும் பாரியளவில் சரிவைச் சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த வாரம் இஸ்ரேல் மீது ஈரான் ட்ரோன்…