30 அடி பள்ளத்தில், வீழ்ந்த முச்சக்கரவண்டி ஒன்று
தெனியாய நாதகல வீதியில் பயணித்த முச்சக்கரவண்டி விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முச்சக்கரவண்டி வீதியை விட்டு விலகி சுமார் 30 அடி பள்ளத்தில் வீழ்ந்ததில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெனியாய பொலிஸார் தெரிவித்துள்ளனர். பெவரலிய, நாதகல அம்பகஸ்தன்ன பிரதேசத்தில் உள்ள…
மோதலை நிறுத்த கடுமையாக உழைப்பதாக சவுதி அரேபியா அறிவிப்பு
அதிகரித்து வரும் பிராந்தியத்தில் மோதலை நிறுத்த கடுமையாக உழைத்து வருவதாக சவுதி அரேபியா தெரிவித்துள்ளது சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கனுடனான தனது சந்திப்பில், தற்போதைய சூழ்நிலையை அதிகரிக்காமல் தடுக்கவும், காஸா…
40 ஆண்டுகளுக்கு பின் கப்பல் சேவை
40 ஆண்டுகளுக்குப் பின்னர் நாகப்பட்டினம் – காங்கேசன்துறை இடையிலான பயணிகள் கப்பல் சேவை இன்று (14) மீண்டும் ஆரம்பமாகியது. இந்நிலையில் இந்தியா நாகபட்டினத்தில் இருந்து பயணிகள் கப்பல் இன்று யாழ்ப்பாணம் காங்கேசன்துறையை வந்தடைந்தது. நாகபட்டினத்திலிருந்து புறப்பட்ட கப்பல் காங்கேசன்துறையை பிற்பகல் 12.30…
வீட்டு குப்பை நெருப்பால் உயிரிழந்த தாய்!
வீட்டில் குப்பை கொழுத்திய போது எதிர்பாராத வகையில் ஆடையில் பற்றி எரிந்த தீயினால் காயமடைந்த பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சாவகச்சேரி, சங்கத்தானையை சேர்ந்த 4 பிள்ளைகளின் தாயான சுகந்தன் தயாபரி என்ற 37 வயதானவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சம்பவம்…
ஒன்லைன் வேலை வாய்ப்பு – 1 கோடி மோசடி – நபர் கைது
ஒன்லைன் மூலம் வேலை வாய்ப்பு தருவதாக கூறி சுமார் 1 கோடி ரூபாய் மோசடி செய்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு மோசடி விசாரணைப் பிரிவிற்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். சந்தேக நபர்…
புலமைப்பரிசில் தொடர்பான தகவல்!
நாளை (15) நடைபெறவுள்ள புலமைப்பரிசில் பரீட்சைக்கான வினாத்தாள்களை கொண்டு செல்லும் பணிகள் நிறைவடைந்துள்ளதாக பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது. அனர்த்த நிலைமைகள் ஏற்படும் இடத்தில் இருக்கும் சகல பரீட்சார்த்திகளும் அருகில் உள்ள பரீட்சை நிலையங்களில் பரீட்சை எழுதுவதற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக, பிரதிப் பரீட்சை…
பாதுகாப்பற்ற மரங்களை அகற்றுவது தொடர்பில் கலந்துரையாடல்
புறநகர் பகுதிகளில் ஏற்படக்கூடிய அபாயகரமான மரங்கள் முறிந்து விழுவதைத் தடுக்கும் நடவடிக்கைகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த கலந்துரையாடல் ஒன்று 11 ஆம் திகதி கொழும்பில் உள்ள அனர்த்த முகாமைத்துவ நிலையத்தில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித்த பண்டார தென்னகோன்…
கட்டார் செல்ல முயற்சித்த யுவதி கைது!
கட்டாருக்கு சட்டவிரோதமான முறையில் வீட்டு வேலைக்காக செல்ல முயற்சித்த இளம் யுவதியொருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு – மொரட்டுவ பிரதேசத்தை சேர்ந்த 20 வயதுடைய இளம் யுவதியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில்…
4.2 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் குறித்து சீனாவுடன் உடன்படிக்கை!!
சீனா எக்சிம் வங்கியும் இலங்கையும் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் உடன்படிக்கைக்கு வந்துள்ளதாக நிதியமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன்போது, கடனை மறுசீரமைப்பதற்கான முக்கிய கொள்கைகள் மற்றும் முக்கிய நிபந்தனைகள் தொடர்பாக பொருத்தமான உடன்பாடு எட்டப்பட்டதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.குறித்த உடன்படிக்கையின் கீழ் சீன வங்கிக்கு…
வௌ்ள அபாய எச்சரிகை மேலும் நீடிப்பு!
இரண்டு பிரதான ஆறுகள் தொடர்பில் விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, கிங் கங்கை மற்றும் நில்வலா ஆற்றுப்பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.நில்வலா ஆற்றுப் பகுதியில் பெய்து…