விராட் கோலியின் ஒரு பதிவிற்கு இத்தனை கோடி கிடைக்குமா!
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆட்டக்காரரான விராட் கோலியை இன்ஸ்டாகிராமில் 274 மில்லியன் பேர் பின்தொடர்கின்றனர். இந்தநிலையில் அவர் இன்ஸ்டாகிராமில் பதிவிடும் ஒவ்வொரு பதிவிற்கும் எத்தனை கோடி ரூபாய் கிடைக்கும் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்படி அவர் இன்ஸ்டாகிராமில் எதையாவது…
மாயமாகியிருந்த குழுவினர் மீட்பு
கண்டி, ரட்டேமுல்ல பகுதியில் 12 முதல் 24 வயதுக்குட்பட்ட மாணவர்கள் உள்ளிட்ட 8 பேர் கொண்ட குழு, நேற்று மாலை ஹந்தானை மலை உச்சியைப் பார்வையிடுவதற்காக ஒன்று கூடியிருந்தது. பின்னர் மூடுபனி மற்றும் மழை காரணமாக, அவர்களால் திரும்பி வருவதற்கு பாதையைக்…
கொள்கலன் நெரிசல் முடிவு
கொழும்பு துறைமுகத்தில் இறக்குமதி கொள்கலன்களை அனுமதிப்பதில் ஏற்பட்டிருந்த நெரிசல் இப்போது முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது. தற்போது இந்த நெரிசல் முற்றிலும் தீர்க்கப்பட்டுள்ளதாக மேலதிக சுங்கப் பணிப்பாளர் மற்றும் சுங்க ஊடகப் பேச்சாளர் சீவலி அருக்கொட தெரிவித்துள்ளார். கடந்த சில…
கரையொதுங்கிய மீனவர்களின் சடலங்கள்!
களுத்துறை, பேருவளை, மொரகல்ல பகுதியில் மீன்பிடி படகு கவிழ்ந்ததில், காணாமல் போயிருந்த இரண்டு மீனவர்களின் சடலங்கள் கரையொதுங்கியுள்ளன. பெந்தோட்டை கடற்கரையில் மீனவர்களின் சடலங்கள் கரையொதுங்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நேற்று (28) காலை மீன்பிடிக்கச் சென்றிருந்த போது அவர்கள் இந்த…
GMOA புதிய தலைவர் தெரிவு
அரச வைத்தி அதிகாரிகள் சங்கத்தின் வருடாந்திர தேர்தலில் வைத்தியர் சஞ்சீவ தென்னகோன் மீண்டும் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். வைத்தியர் பிரபாத் சுகததாச மீண்டும் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். நேற்று (28) நடைபெற்ற சங்கத்தின் வருடாந்திர தேர்தலில் அவர்கள் 60% க்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று…
நாளை விசேட அமர்வு
நாளை (30) விசேட பாராளுமன்ற அமர்வு நாளாக, பாராளுமன்றம் கூடவுள்ளது. அதன்படி, சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் நாளை காலை 9.30 மணிக்கு பாராளுமன்றம் கூடவுள்ளது. 2024 ஆம் ஆண்டு 44 ஆம் இலக்க பொது நிதி முகாமைத்துவ சட்டத்தின்…
அலையில் அடித்துச் செல்லப்பட்ட நபர்களை காப்பாற்றிய பொலிஸார்
உஸ்ஸன்கொட கடற்கரையில் நீராட சென்ற இருவர், அலையில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், பொலிஸ் உயிர்காக்கும் பிரிவின் அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து நேற்று (28) மாலை நடந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிர்காக்கும் பணியில் இருந்த அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து இருவரையும்…
மீன்பிடி படகு விபத்து
தங்காலை பரவி வெல்ல மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க சென்றிருந்த நெடுநாள் படகொன்று மீண்டும் கரைக்கு திரும்பிக் கொண்டிருந்த போது விபத்துக்குள்ளானது. விபத்து நடந்த நேரத்தில் மீன்பிடி படகில் 6 மீனவர்கள் இருந்துள்ளதுடன், அவர்களில் நான்கு பேர் உயிர் பிழைத்துள்ளனர். இரண்டு…
நுவரெலியாவில் கார் விபத்து
நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பம்பரகலை பகுதியில் (28) மாலை பிரதான வீதியில் பயணித்துக்கொண்டிருந்த கார் வேகக் கட்டுப்பாட்டை இழந்து குடைசாய்ந்து விபத்துக்குள்ளானது. விபத்தில் காரில் பயணம் செய்த மூவர் சிறு காயங்களுடன் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.…
மீனவர்களை தேடும் பணி: பீச்கிராஃப்ட் விமானம் ஈடுபாடு
தங்காலை பரவி வெல்ல துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்று இன்று (29) காலை விபத்துக்குள்ளான நெடுநாள் மீன்பிடி படகில் இருந்து காணாமற்போன இரு மீனவர்களைத் தேடுவதற்காக விமானப்படையின் KA-350 பீச்கிராஃப்ட் விமானம் பயன்படுத்தப்பட்டுள்ளது. தற்போது சுமார் ஒரு மணி நேரமாக அந்த விமானம்…
