இனி அரசியல்வாதிகளின் தலையீடு இருக்காது
குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து, அரசாங்கத்தை சுத்தப்படுத்தி, ஆசியாவிலேயே எழுச்சிபெற்ற நாடாக இலங்கையை முன்னேற்றுவோம் எனத் தெரிவித்த தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திசாநாயக்க, அரச அலுவலகங்களில் அரசியல்வாதிகளின் தலையீடுகள் இல்லாது பணியாற்றக் கூடிய ஒரு சூழலை…
சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக மொயீன் அலி அறிவிப்பு
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னணி சகலதுறை வீரரான 37 வயதுடைய மொயீன் அலி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இவர் இங்கிலாந்து அணிக்காக 68 டெஸ்ட், 138 ஒருநாள் மற்றும் 92 T20 சர்வதேச போட்டிகளில் ஆடி…
மக்கள் என்னை வெற்றி பெறச் செய்வார்கள் – சஜித்
தபால் நிலையங்களை விற்பனை செய்வது தற்போதைய ஜனாதிபதியின் பொழுதுபோக்காக இருக்கின்றது. நுவரெலியா தபால் நிலையத்தையும் விற்பனை செய்ய முயற்சிக்கின்றார். 21 ஆம் திகதி வெற்றியோடு நான் நுவரெலியாவுக்கு வருவது தபால் நிலையத்தை விற்பனை செய்ய அல்ல. லயன் அறைகளில் அடைக்கப்பட்டு இருக்கின்ற…
சீமெந்தின் வரி குறைப்பு
இறக்குமதி செய்யப்படும் சீமெந்துக்கு விதிக்கப்பட்ட செஸ் வரி கிலோ ஒன்றுக்கு 1 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது.
கழிவறை குழிக்குள் உயிருடன், இருந்த சிறுத்தைக் குட்டி
மஸ்கெலியா பண்ணியன் தனியார் தோட்டத்தில் கழிவறை குழியில் சிறுத்தை குட்டி ஒன்று உயிருடன் இருப்பதாக தோட்டத் தொழிலாளர்கள் தோட்ட நிர்வாகியின் கவனத்துக்கு கொண்டு வந்தனர். இது தொடர்பில் மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கும் தெரியப்படுத்தியுள்ளனர். அதனையடுத்து, அது தொடர்பில் நல்லத்தண்ணி வனத்துறை…
வர்த்தக நிலையம் ஒன்றில் பாரிய தீ பரவல்
பொலன்னறுவை கதுருவெல வீதியிலுள்ள வணிக வளாகத்தில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் தீ பரவியுள்ளது. இன்று (07) இரவு இந்த தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தீயை அணைக்கும் பணியில் பொலன்னறுவை தீயணைப்பு பிரிவினரால் 3 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.…
இன, மத அடிப்படையில் தேர்தல் பணிகளை நடத்தமாட்டேன்
அரசியலமைப்பின் பிரகாரம் இலங்கையிலுள்ள அனைத்து மதத்தினரின் உரிமைகளையும் பாதுகாப்பதற்கான அரசாங்கத்தின் அர்ப்பணிப்பை மீண்டும் வலியுறுத்திய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நாடு எதிர்நோக்கும் தற்போதைய சவால்களை எதிர்கொள்வதில் ஆன்மீக வழிகாட்டலை உறுதிப்படுத்துவதற்கு அனைத்து மதங்களுக்கிடையிலான தொடர்ச்சியான ஒத்துழைப்பின் அவசியத்தையும் சுட்டிக்காட்டினார். கொழும்பு பண்டாரநாயக்க…
திடீரென மாவையை சந்தித்த ஜனாதிபதி ரணில்!
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும், இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (7) மாலை இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் தெல்லிப்பளையில் உள்ள மாவை சேனாதிராஜாவின் இல்லத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க , இரண்டு…
கண்டி திரித்துவக் கல்லூரி வெற்றி
2024 ஆம் ஆண்டிற்கான பிராட்பி கேடயத்தை கண்டி திரித்துவக் கல்லூரி ரக்பி அணி இன்று (07) வென்றுள்ளது. 78வது பிராட்பி கேடயத்திற்காக பல்லேகலயில் நடைபெற்ற இரண்டாவது கட்டப் போட்டியில் 25க்கு 23 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் ரோயல் கல்லூரியை வீழ்த்தி கண்டி…
வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் விசேட தினம் நாளை!
2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்காக இதுவரை சுமார் 30 இலட்சம் உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கும் பணிகள் கடந்த 3ம் திகதி ஆரம்பிக்கப்பட்டதுடன்,எதிர்வரும்14ம் திகதி வரை இடம்பெறவுள்ளது. உத்தியோகபூர்வ வாக்காளர்…