கடவுச்சீட்டு தொடர்பில் ஆராய போலந்து சென்ற அதிகாரிகள் குழு
வெளிநாட்டு கடவுச்சீட்டு தயாரிக்கும் செயல்முறையை ஆராய்வதற்காக குடிவரவுத் திணைக்கள அதிகாரிகள் குழு ஒன்று போலந்து சென்றுள்ளது. இலத்திரனியல் கடவுச்சீட்டு (E-Passport) விலைமனு கோரல் காரணமாக, கடவுச்சீட்டு வழங்குவதில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்குள் நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் தற்போது…
இருதய சிகிச்சைக்காக 2028 வரை வரிசையில் காத்திருக்கும் நோயாளிகள்
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இருதய சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட வேண்டிய ஐயாயிரம் நோயாளிகள் 2028 ஆம் ஆண்டு வரை காத்திருப்புப் பட்டியலில் உள்ளதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான வைத்தியர் சங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பு தேசிய வைத்தியசாலையின் ஐந்து பிரதான விடுதிகளில் இருதய…
ரணிலுடன் இணைந்தார் தலதா அத்துகோரல!
அண்மையில் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்த தலதா அத்துகோரல எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளார். அதன்படி தற்போது வெலிமடை நகரில் நடைபெற்று வரும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பொதுக்கூட்டத்தில் அவர் கலந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வாக்காளர் அட்டையை விநியோகித்த தபால் ஊழியர் மீது தாக்குதல்
வாக்காளர் அட்டையை விநியோகம் செய்த களுத்துறை தெற்கு தபால் நிலைய ஊழியரை தாக்கிய நபரை களுத்துறை வடக்கு பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர் களுத்துறை ஜாவத்த பிரதேசத்தை சேர்ந்த 45 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர். தற்சமயம், தபால் நிலைய…
இனி அரசியல்வாதிகளின் தலையீடு இருக்காது
குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து, அரசாங்கத்தை சுத்தப்படுத்தி, ஆசியாவிலேயே எழுச்சிபெற்ற நாடாக இலங்கையை முன்னேற்றுவோம் எனத் தெரிவித்த தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திசாநாயக்க, அரச அலுவலகங்களில் அரசியல்வாதிகளின் தலையீடுகள் இல்லாது பணியாற்றக் கூடிய ஒரு சூழலை…
சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக மொயீன் அலி அறிவிப்பு
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னணி சகலதுறை வீரரான 37 வயதுடைய மொயீன் அலி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இவர் இங்கிலாந்து அணிக்காக 68 டெஸ்ட், 138 ஒருநாள் மற்றும் 92 T20 சர்வதேச போட்டிகளில் ஆடி…
சீமெந்தின் வரி குறைப்பு
இறக்குமதி செய்யப்படும் சீமெந்துக்கு விதிக்கப்பட்ட செஸ் வரி கிலோ ஒன்றுக்கு 1 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது.
கழிவறை குழிக்குள் உயிருடன், இருந்த சிறுத்தைக் குட்டி
மஸ்கெலியா பண்ணியன் தனியார் தோட்டத்தில் கழிவறை குழியில் சிறுத்தை குட்டி ஒன்று உயிருடன் இருப்பதாக தோட்டத் தொழிலாளர்கள் தோட்ட நிர்வாகியின் கவனத்துக்கு கொண்டு வந்தனர். இது தொடர்பில் மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கும் தெரியப்படுத்தியுள்ளனர். அதனையடுத்து, அது தொடர்பில் நல்லத்தண்ணி வனத்துறை…
வர்த்தக நிலையம் ஒன்றில் பாரிய தீ பரவல்
பொலன்னறுவை கதுருவெல வீதியிலுள்ள வணிக வளாகத்தில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் தீ பரவியுள்ளது. இன்று (07) இரவு இந்த தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தீயை அணைக்கும் பணியில் பொலன்னறுவை தீயணைப்பு பிரிவினரால் 3 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.…
இன, மத அடிப்படையில் தேர்தல் பணிகளை நடத்தமாட்டேன்
அரசியலமைப்பின் பிரகாரம் இலங்கையிலுள்ள அனைத்து மதத்தினரின் உரிமைகளையும் பாதுகாப்பதற்கான அரசாங்கத்தின் அர்ப்பணிப்பை மீண்டும் வலியுறுத்திய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நாடு எதிர்நோக்கும் தற்போதைய சவால்களை எதிர்கொள்வதில் ஆன்மீக வழிகாட்டலை உறுதிப்படுத்துவதற்கு அனைத்து மதங்களுக்கிடையிலான தொடர்ச்சியான ஒத்துழைப்பின் அவசியத்தையும் சுட்டிக்காட்டினார். கொழும்பு பண்டாரநாயக்க…
