Editor 2

  • Home
  • கடலுக்கு செல்ல வேண்டாம்; மீனவர்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

கடலுக்கு செல்ல வேண்டாம்; மீனவர்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

சிலாபம் முதல் புத்தளம் மற்றும் மன்னார் வழியாக காங்கேசன்துறை வரையிலும், காலி முதல் ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலும் கடற்கரைக்கு அப்பால் உள்ள கடல் பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 60-70 கிலோமீட்டர் வரை அதிகரிக்கக்கூடும். அதனால், கடலுக்குச் செல்ல வேண்டாம்…

பொம்மைக்குள் போதைப்பொருள் 

கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தில், இன்று அதிகாலை 10 கிலோ 323 கிராம் கொகெய்ன் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் மற்றும் விமான நிலைய சுங்க பிரிவு அதிகாரிகள் இணைந்து மேற்கொண்ட சோதனையில் குறித்த போதைப்பொருளை…

 திடீர் மின் தடை

கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் திடீரென மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நேற்று (29) இரவு ஏற்பட்ட கடும் காற்று மற்றும் மழை காரணமாக மரங்கள் முறிந்து விழுந்துள்ள நிலையில், மின்கம்பிகளுக்கு சேதம் ஏற்பட்டு மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

 மரம் விழுந்ததில் 13 வீடுகள் சேதம்

கொழும்பு-14 கிராண்ட்பாஸ், செயிண்ட் ஜோசப் தெருவில் பதின்மூன்று வீடுகளின் கூரைகள் மீது ஒரு மரம் விழுந்ததில் சுமார் 40 பேர் இடம்பெயர்ந்தனர். இருப்பினும், எந்த உயிரிழப்பும் ஏற்பட்டதாக தகவல் இல்லை

காற்றினால் நாடு முழுவதும் பெரும் பாதிப்பு

கொழும்பு உட்பட நாடு முழுவதும் வீசிய பலத்த காற்று காரணமாக மரங்கள் விழுதல் உள்ளிட்ட அனர்த்தங்கள் பதிவாகியுள்ளதாக பேரிடர் மேலாண்மை மையங்கள் தெரிவிக்கின்றன. பல வீடுகளின் கூரைகள் கடுமையாக சேதமடைந்துள்ளன. மரங்கள் விழுந்ததால் மின்சாரம் பாதிக்கப்பட்டுள்ளது. கொழும்பின் பல பகுதிகளில் பெரிய…

மிஸ் வேர்ல்ட் மல்டிமீடியா; இலங்கை அழகிக்கு இரண்டாம் இடம்

இந்தியாவின் தெலுங்கானாவில் நடைபெறும் உலக அழகி போட்டியின்போது, மிஸ் வேர்ல்ட் மல்டிமீடியா என்ற சவாலில், ஆசியாவிலிருந்து இரண்டாவது வெற்றியாளராக, இலங்கை அழகி அனுதி குணசேகர தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதன்படி, குறித்த மைல்கல்லை எட்டிய முதல் இலங்கையர் இவராகும் என்று, அவரது ஊடகக் குழு…

நம் இதயங்களையும், நாவுகளையும் தயார்படுத்துவோம்…

இஸ்லாமிய நாட்காட்டியில் மிகச்சிறந்த நாட்களில் ஒன்றான அரஃபா நாளுக்கு இன்னும் ஒரு வாரம் 05-06-2025 மட்டுமே உள்ளது. கருணை, மன்னிப்பு மற்றும் ஆசீர்வாதங்களால் நிறைந்த நாள். திக்ர், துஆ மற்றும் உண்மையான மனந்திரும்புதலுக்காக நம் இதயங்களையும் நாவுகளையும் தயார்படுத்துவோம். அரஃபாவில் நிற்பவர்களின்…

இலஞ்சம் பெற்ற கிராம சேவகர் கைது

யாழில் பென்ட்ரைவினை (Pendrive) இலஞ்சமாக பெற்ற கிராம சேவகர் ஒருவர் (29) கைதுசெய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் – அத்தியடி ஜே/78 கிராம சேவகராக கடமை புரிந்தவர் இலஞ்சமாக பென்ட்ரைவினை பெறுவதற்கு முயற்சித்தவேளை இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்…

முச்சக்கர வண்டியுடன் கருகிய நிலையில் சடலம்

இறக்குவாணை – ஹொரமுல்ல பிரதேசத்தின் பொது மயான பூமியில் முச்சக்கர வண்டியுடன் கருகிய நிலையில் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. சடலம் அடையாளம் காண முடியாத அளவுக்கு நெருப்பில் கருகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை இறக்குவாணை பொலிஸார் மேற்கொண்டு…

சீன அமைச்சர் ஜனாதிபதியை சந்தித்தார்

இலங்கைக்கு வருகை தந்துள்ள சீன மக்கள் குடியரசின் வர்த்தக அலுவல்கள் அமைச்சர் வங் வென்டாவோ, நேற்று (29) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை சந்தித்து கலந்துரையாடினார். தற்போது இலங்கையில் நிலவும் அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும்…