புலமைப்பரிசில் தொடர்பான தகவல்!
நாளை (15) நடைபெறவுள்ள புலமைப்பரிசில் பரீட்சைக்கான வினாத்தாள்களை கொண்டு செல்லும் பணிகள் நிறைவடைந்துள்ளதாக பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது. அனர்த்த நிலைமைகள் ஏற்படும் இடத்தில் இருக்கும் சகல பரீட்சார்த்திகளும் அருகில் உள்ள பரீட்சை நிலையங்களில் பரீட்சை எழுதுவதற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக, பிரதிப் பரீட்சை…
பாதுகாப்பற்ற மரங்களை அகற்றுவது தொடர்பில் கலந்துரையாடல்
புறநகர் பகுதிகளில் ஏற்படக்கூடிய அபாயகரமான மரங்கள் முறிந்து விழுவதைத் தடுக்கும் நடவடிக்கைகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த கலந்துரையாடல் ஒன்று 11 ஆம் திகதி கொழும்பில் உள்ள அனர்த்த முகாமைத்துவ நிலையத்தில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித்த பண்டார தென்னகோன்…
கட்டார் செல்ல முயற்சித்த யுவதி கைது!
கட்டாருக்கு சட்டவிரோதமான முறையில் வீட்டு வேலைக்காக செல்ல முயற்சித்த இளம் யுவதியொருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு – மொரட்டுவ பிரதேசத்தை சேர்ந்த 20 வயதுடைய இளம் யுவதியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில்…
4.2 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் குறித்து சீனாவுடன் உடன்படிக்கை!!
சீனா எக்சிம் வங்கியும் இலங்கையும் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் உடன்படிக்கைக்கு வந்துள்ளதாக நிதியமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன்போது, கடனை மறுசீரமைப்பதற்கான முக்கிய கொள்கைகள் மற்றும் முக்கிய நிபந்தனைகள் தொடர்பாக பொருத்தமான உடன்பாடு எட்டப்பட்டதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.குறித்த உடன்படிக்கையின் கீழ் சீன வங்கிக்கு…
வௌ்ள அபாய எச்சரிகை மேலும் நீடிப்பு!
இரண்டு பிரதான ஆறுகள் தொடர்பில் விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, கிங் கங்கை மற்றும் நில்வலா ஆற்றுப்பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.நில்வலா ஆற்றுப் பகுதியில் பெய்து…
ரயிலில் குடிபோதையில் நபர் ஒருவர் செய்த காரியம்!
நேற்றிரவு (11) யாழ் கொழும்பு ரயிலில் மது போதையில் பயணித்தவரால் ஏற்பட்ட மோதல் காரணமாக பயணிகள் பெரும் அசெளகரியங்களிற்கு உள்ளாகியுள்ளனர்.அச்சத்தில் இருந்த மக்கள் புகையித பாதுகாப்பு பிரிவினருக்கு அறிவித்ததை அடுத்து, அவர்களின் தலையீட்டின் பின்னர் மோதலில் ஈடுபட்டவர் கிளிநொச்சி புகையிரதத்தில் இறங்கி…
1948 க்கு முன் பிரிட்டிஷ் ஆணையின் கீழ் வழங்கப்பட்ட பழமையான பாலஸ்தீன பாஸ்போர்ட்.
1948 க்கு முன் பிரிட்டிஷ் ஆணையின் கீழ் வழங்கப்பட்ட பழமையான பாலஸ்தீன பாஸ்போர்ட்.
பாராளுமன்ற உறுப்பினராக அலி ஸாஹிர் நியமனம்
அலி ஸாஹிர் மௌலானா பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது. நசீர் அஹமட்டின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி வறிதானதை தொடர்ந்து ஏற்பட்டுள்ள வெற்றிடத்திற்கு ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் அலி சாஹிர் மௌலானா நியமிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டு…
ஒவ்வொரு முஸ்லிமின் இதயத்திலும், பாலஸ்தீனப் பிரச்சினை உள்ளது – விளாடிமிர் புடின்
பாலஸ்தீனியப் பிரச்சினை ஒவ்வொரு முஸ்லிமின் இதயத்திலும் உள்ளது, மேலும் இஸ்ரேல், பாலஸ்தீன நிலங்களை இராணுவ சக்தியைப் பயன்படுத்துவதன் மூலம் கைப்பற்றியது.” இவ்வாறு தெரிவித்துள்ளார் ரஸ்ய அதிபர் விளாமிடீர் புட்டின். இந்தத் தகவலை பலஸ்தீன ஆதரவு ஊடகம் வெளியிட்டுள்ளது.
இலங்கை வானிலிருந்து விழுந்த மர்ம பொருள் – பரிசோதனைக்கு அனுப்பி வைப்பு
இலங்கையின் சில பகுதிகளில் இரண்டு நாட்களாக காலை வேளையில் வானத்தில் இருந்து மர்ம பொருள் விழுந்ததால் அப்பகுதி மக்கள் குழப்பமடைந்துள்ளனர். பொலன்னறுவை, திம்புலாகலை, வெலிகந்த, மஹாவலி உள்ளிட்ட பல பகுதிகளில் இரண்டு நாட்களாக காலை வேளையில் வானத்தில் இருந்து அடையாளம் தெரியாத…