LOCAL

  • Home
  • லிட்ரோவுக்கு புதிய தலைவர் நியமனம்!

லிட்ரோவுக்கு புதிய தலைவர் நியமனம்!

லிட்ரோ எரிவாயு நிறுவனம் மற்றும் லிட்ரோ எரிவாயு டெர்மினல் லங்கா நிறுவனத்தின் தலைவராக சன்ன குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளார். லிட்ரோ நிறுவனத்தின் தலைவராக இருந்த முதித பீரிஸ் புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன் பதவி விலகியமை குறிப்பிடத்தக்கது.

புதிய அமைச்சரவையின் முதல் தீர்மானம் இதோ!

இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் துமிந்த ஹுலங்கமுவ மற்றும் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் அனில் பெர்னாண்டோ ஆகியோரை ஜனாதிபதியின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர்களாக நியமிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து…

புலமைப்பரிசில் பரீட்சை பிரச்சினைக்கு ஜனாதிபதி வழங்கிய தீர்வு!

புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கைகளை நிறுத்துவதாக ஜனாதிபதி அறிவித்ததாக புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் பிரச்சினைக்காக குரல் எழுப்பிய பெற்றோர்கள் தெரிவித்தனர். நேற்று (30) பிற்பகல் ஜனாதிபதியை சந்தித்த போதே இந்த தீர்மானத்தை தமக்கு அறிவித்ததாக அவர்கள் மேலும் தெரிவித்தனர். மேலும்…

முன்னாள் எம்.பிக்களுக்கான விசேட அறிவிப்பு

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு துப்பாக்கிகளை உடனடியாக பாதுகாப்பு அமைச்சிடம் ஒப்படைக்குமாறு அறிவிக்கப்படுள்ளது. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர் சேவைகள் பிரிவினால் இது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான கடிதங்களை உரிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு உடனடியாக அனுப்பி வைக்க நடவடிக்கை…

வரி செலுத்த இன்றே இறுதி நாள்

2023/2024 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான வரி செலுத்துவோர் அனைவரும் இன்றே (30) வருமான வரியை செலுத்தி முடிக்க வேண்டும் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. எவரேனும் பணம் செலுத்தத் தவறினால் அல்லது தாமதப்படுத்தினால், அவர் சட்டத்தின்படி அபராதம் மற்றும் வட்டிக்கு…

சாதாரண தரப் பரீட்சையில் முதல் பத்து இடங்களில் ஒரே ஒரு மாணவர்!

2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகளில் முதல் பத்து இடங்களில் ஒரே ஒரு மாணவர் மட்டுமே உள்ளார். மற்றைய ஒன்பது பேரும் மாணவிகள் என்பது சிறப்பம்சமாகும். அந்த 10 பேரில் மாத்தறை ராகுல வித்தியாலயத்தில்…

இலங்கையின் பணவீக்கத்தில் வீழ்ச்சி

சனத்தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் 2024 ஓகஸ்ட் மாதத்திற்கான இலங்கையின் தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் மற்றும் மாதாந்திர நுகர்வோர் பணவீக்கத்தை வெளியிட்டுள்ளது. இதற்கமைய ஓகஸ்ட் 2024 இல் 0.5% ஆக இருந்த பணவீக்கம் செப்டெம்பர் 2024 இல் -0.5%…

கொத்து, பிரைட் ரைஸ் விலைகளில் மாற்றம்

இன்று (29) நள்ளிரவு முதல் முட்டைகளை பயன்படுத்தி தயாரிக்கப்படும் கொத்து மற்றும் பிரைட் ரைஸ் போன்ற உணவு வகைகளின் விலைகளை குறைக்க அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி கொத்து மற்றும் பிரைட் ரைஸ் விலை 40 ரூபாவால்…

OTPஐ யாரிடமும் பகிர வேண்டாம்

வங்கிகளால் ஒருமுறை மட்டும் வழங்கப்படும் கடவு எண்ணை (OTP) எக்காரணம் கொண்டும் யாரிடமும் பகிர வேண்டாம் என பொலிஸார், பொது மக்களிடம் கோரியுள்ளனர். அண்மைக்காலமாக பாரிய நிதி மோசடிகள் இடம்பெற்று வருவதாக சுட்டிக்காட்டியே இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

அரசியலமைப்பு சபையில் புதிய மாற்றம்!

அரசியலமைப்பு சபைக்கான ஜனாதிபதியின் பிரதிநிதியாக அமைச்சர் விஜித ஹேரத் நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் குறித்த நியமனம் செய்யப்பட்டதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன குறிப்பிட்டுள்ளார். இதன்படி, முன்னாள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அரசியலமைப்பு சபையிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். மேலும்,…