காட்டு யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு
நாவுல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட போகஸ்பொபெல்ல பிரதேசத்தில் காட்டு யானை தாக்கியதில் நபரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் 53 வயதுடைய போகஸ்பொபெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே உயிரிழந்துள்ளார். உறவினர் ஒருவரின் வீட்டுக்குச் சென்றுவிட்டு மீண்டும் வீடு நோக்கி திரும்பிக்கொண்டிருந்த போதே,…
இலங்கையில் உணவின் தரம் தொடர்பில் வௌியான ஆய்வு முடிவு
உணவின் தரத்தை பரிசோதிப்பதற்காக உலக சுகாதார ஸ்தாபனத்தினால் பரிந்துரைக்கப்பட்ட எந்தவொரு பரிசோதனையையும் இலங்கையால் மேற்கொள்ள முடியவில்லை என பேராசிரியர் கமல் கம்மன்பில தெரிவித்துள்ளார். அண்மையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, தலசீமியா மற்றும் சிறுநீரக நோயின் தாக்கம் இந்நாட்டிலும் அதிகரித்துள்ளதாக தெரிவித்தார்.…
முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலை தொடர்பான அறிவிப்பு
எதிர்வரும் ஜனவரி மாதம் வரை கோழி இறைச்சி மற்றும் முட்டை ஆகியவற்றின் விலையில் மாற்றம் இருக்காது என்று கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர(Ajith Gunasekara) தெரிவித்துள்ளார். எதிர்வரும் பண்டிகை காலத்தை கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர்…
மின் கட்டணம் தொடர்பில் பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தீர்மானம்
மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பில் மின்சார சபை சமர்ப்பித்துள்ள பிரேரணையை ஆய்வு செய்யவுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது. முன்மொழிவை ஆணைக்குழு பரிசீலித்து அதற்கான பரிந்துரைகளை வழங்கும் என்று சிரேஷ்ட அதிகாரி குறிப்பிட்டார். மின்சார சபையின் முன்மொழிவு தொடர்பான…
நாட்டில் புதியதோர் மாற்றத்தை ஏற்படுத்துவதே அரசாங்கத்தின் நோக்கம்
கடந்த 75 வருடங்களில் நாடு பயணித்த திசையை மாற்றி ஆய்வுகள், சான்றுகள் மற்றும் தரவுகளின் அடிப்படையில் நாட்டில் புதியதோர் மாற்றத்தை ஏற்படுத்துவதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். கொழும்பு மருத்துவ பீடத்தில் நேற்று(06) தேசிய விஞ்ஞான…
புகையிரத திணைக்களம் நடவடிக்கை எடுக்க வேண்டும்!
குளிரூட்டப்பட்ட கடுகதி ரயில் சேவை யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு வரையான சேவையினை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை தொடர்ச்சியாக முன்னெடுத்துள்ளது. இதுவரை காலமும் வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய தினங்களில் மாத்திரம் சேவையினை வழங்கி வந்த கடுகதி ரயில் தற்போதைய…
பாவனைக்கு உதவாத 58 மூடை கோதுமை மா மீட்பு
பதுளை மயிலகஸ்தென்ன பகுதியில் உள்ள களஞ்சியசாலையில் பாவனைக்கு உதவாத 58 கோதுமை மா மூடைகளை இன்று (07) பதுளை மாநகரசபையின் சுகாதார அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். அரசாங்கத்திற்கு சொந்தமான இந்த களஞ்சியசாலையை பண்டாரவளை பிரதேசத்தில் உள்ள வர்த்தகர் ஒருவர் வாடகை அடிப்படையில் பெற்று…
ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது
ஜா-எல, ஏக்கல, க்ரூஸ்வத்த பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து 500 கிராம் ஹெரோயின் போதைப் பொருளை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். அத்துடன், அந்த வீட்டின் உரிமையாளரான 38 வயதுடைய நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். சந்தேகநபரின் வீட்டின் படுக்கையறை ஒன்றில் இந்த போதைப்பொருள்…
மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் பலி!
தொடன்கொட, கெட்டகஹஹேன நேஹின்ன வீதியின் நேஹின்ன பிரதேசத்தில் நேற்று (6) இரவு மோட்டார் சைக்கிள் ஒன்று மரத்தில் மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக தொடங்கொட பொலிஸார் தெரிவித்தனர். கெட்டகஹாஹேனவில் இருந்து நேஹின்ன நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்ததில்…
“பாலின அடிப்படையிலான வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக ஒன்றிணைவோம்”
பாலின அடிப்படையிலான வன்முறைக்கு எதிரான (GBV) 16 நாள் உலகளாவிய செயல்முனைவுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தின் தலைமையில் பாராளுமன்றத்தில் நேற்று (06) பல செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன. முதலாவதாக “பாலின அடிப்படையிலான வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக ஒன்றிணைவோம்”…