LOCAL

  • Home
  • உள்ளூராட்சி நிறுவனங்களின் ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம்!

உள்ளூராட்சி நிறுவனங்களின் ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம்!

உள்ளூராட்சி நிறுவனங்களின் நிரந்தரமற்ற ஊழியர்கள் அனைவரும் விரைவில் அரச நிரந்தர ஊழியர்களாக்கப்படுவார்கள் என இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கம்புர தெரிவித்துள்ளார்.பாராளுமன்றத்தில் இன்று (04) கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.“நிரந்தர நியமனம் வழங்கப்படாத இந்த 8,400 பேரையும்…

லாஃப்ஸ் எரிவாயு விலை குறைப்பு!

லாஃப்ஸ் எரிவாயு நிறுவனமும் இன்று (04) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் தமது எரிவாயு விலையில் திருத்தம் மேற்கொண்டுள்ளது.இதன்படி, 12.5 கிலோ கிராம் லாஃப்ஸ் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 160 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதுடன், அதன் புதிய விலை 3,680…

“இருதய சத்திர சிகிச்சை நிபுணராகி, உயரிய சேவை செய்ய ஆசை

க.பொ.த.உயர் தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் மருத்துவத்துறையில் அம்பாறை மாவட்டத்தில் முதல் இடம் பிடித்த கல்முனை ஸாஹிறா தேசிய பாடசாலை மாணவன் பிர்தெளஸ் இஹ்ஸான் அஹமட் மருத்துவத் துறைக்கு தெரிவாகியுள்ளதுடன், அம்பாறை மாவட்டத்தில் முதல் இடத்தைப் பெற்றுள்ளார். இவரது எதிர்கால இலட்சியம்…

நாளை குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம்!

சீரற்ற வானிலை காரணமாக கலடுவாவ வலைய சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து செல்லும் பிரதான நீர் விநியோக குழாயின் ஒரு பகுதியில் உடைப்பு ஏற்பட்டுள்ளது.தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனைத் தெரிவித்துள்ளது.இதன்படி, காலை 6 மணி முதல்…

களனி, கம்பஹா, கடுவெல பாடசாலைகளுக்கு விடுமுறை!

களனி மற்றும் கம்பஹா கல்வி வலயத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (04) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதேவேளை, கடுவெல கல்வி கோட்டப்பிரிவு பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.சீரற்ற வானிலை காரணமாக மாகாண கல்விப் பணிப்பாளரினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

3A சித்திகளை பெற்று சாதனை புரிந்த 15 வயது சிறுமி!

புத்தளம் – ஆராச்சிக்கட்டுவ, விஜயகடுபொத பிரதேசத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவர் தனது 15 வயதில் கணிதப் பிரிவில் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு முகம்கொடுத்து 3 சித்திகளைப் பெற்றுள்ளதுடன், புத்தளம் மாவட்டத்தில் 16 ஆவது இடத்தைப் பெற்று சாதனை புரிந்துள்ள சம்பவம் ஒன்று…

கேஸ் விலை குறைப்பு

சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக லிட்ரோ கேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.இதற்கமைய புதிய விலை திருத்தம் நாளை (04) நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.மாற்றம் செய்யப்பட்ட விலைகள் நாளை அறிவிக்கப்படும் எனவும் லிட்ரோ கேஸ் நிறுவனத்தின் தலைவர்…

நாய் கோப்பையில் பேத்திக்கு உணவு கொடுத்த பாட்டி

தனது வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணிகளில் ஒன்றான நாய்க்கு உணவு வைக்கும் கோப்பையில் தன்னுடைய பேத்திக்கு, உணவு கொடுத்தார் என்றக் குற்றச்சாட்டின் கீழ், அந்த பேத்தியின் பாட்டி கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் வெயாங்கொட வதுரவ எனுமிடத்திலேயே இடம்பெற்றுள்ளது. பெற்றோர் இன்மையால் சிறு…

119 Call க்கு எடுத்து, பொய் கூறியவருக்கு நேர்ந்த கதி

பொலிஸ் அவசர இலக்கமான 119க்கு தவறான தகவல்களுடன் அழைப்பினை மேற்கொண்ட நபருக்கு 5 வருட இடைநிறுத்தப்பட்ட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சந்தேக நபரை இன்று ஹட்டன் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போதே மாவட்ட நீதிபதி எம்.பாரூக்தீன் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். கடந்த வருடம்…

ஹோட்டலில் சிக்கிக்கொண்ட சுமார் 85 பேர் மீட்பு #களுத்துறை மாவட்டம்

களுத்துறை- ஹொரண ஸ்வக்வத்த பிரதேசத்தில் உள்ள ஹோட்டலில் சிக்கிக்கொண்ட பல்வேறு வயதுடைய சுமார் 85 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். மாவக் ஓயா நிரம்பி வழிவதால், ஹோட்டலில் சிக்கி எதிர்பாராத வெள்ள பிரச்சினைக்கு அவர்கள் முகம் கொடுத்துள்ளனர்.